Tuesday, March 8, 2011

வலி


கால் வலித்தது ...

காலை காட்சி கண்டு விட்டு

கடைத் தெருவை கடக்கையிலே

கால்கள் வலித்தன .

கீச்சொலி யில் கடந்து சென்ற

வாகனத்தை கை தட்டி அழைத்தேன்.

ஏ ஏ ஏய்... ரிக் ஷா... !!
பணிக்கர் கடைக்கு பக்கத்து சந்து ...

பணித்து விட்டு பதிலுக்குக் காத்திராமல்

பஞ்சு இருக்கையிலே பதிந்து விட்டேன்.

கால் நீட்டி கண் அயரும் வேளையிலே

கவனித்தேன் கண்ணில் பட்ட காலை .

ஓட்டியவனின் மரக் கால் !!
...
....

மனம் வலித்தது .

கண்கள் பனித்தன .

5 comments:

  1. வலித்தது எனக்கும்
    இதைப் படித்ததும்.

    எனினும் வாழ்த்துக்கள்
    வலியுடன் கூடிய
    உன் வரிகளுக்கு !

    ReplyDelete
  2. pala murai uthai vaangkineen

    valikkaveyillai....

    makLin pinjukkaalkaL...

    ReplyDelete
  3. Good one Ganesh...
    All the best and good luck.
    Look forward to see more and more here.

    ReplyDelete
  4. கவனித்தேன் கண்ணில் பட்ட காலை .

    ஓட்டியவனின் மரக் கால் !!
    ...

    மனம் மரத்துப்போன மனிதர்கள் !

    ReplyDelete
  5. வேதனைகள் நிறைய இருக்கின்றன.

    ReplyDelete