கால் வலித்தது ...
காலை காட்சி கண்டு விட்டு
கடைத் தெருவை கடக்கையிலே
கால்கள் வலித்தன .
கீச்சொலி யில் கடந்து சென்ற
வாகனத்தை கை தட்டி அழைத்தேன்.
ஏ ஏ ஏய்... ரிக் ஷா... !!
பணிக்கர் கடைக்கு பக்கத்து சந்து ...
பணித்து விட்டு பதிலுக்குக் காத்திராமல்
பஞ்சு இருக்கையிலே பதிந்து விட்டேன்.
கால் நீட்டி கண் அயரும் வேளையிலே
கவனித்தேன் கண்ணில் பட்ட காலை .
ஓட்டியவனின் மரக் கால் !!
...
....
மனம் வலித்தது .
கண்கள் பனித்தன .
வலித்தது எனக்கும்
ReplyDeleteஇதைப் படித்ததும்.
எனினும் வாழ்த்துக்கள்
வலியுடன் கூடிய
உன் வரிகளுக்கு !
pala murai uthai vaangkineen
ReplyDeletevalikkaveyillai....
makLin pinjukkaalkaL...
Good one Ganesh...
ReplyDeleteAll the best and good luck.
Look forward to see more and more here.
கவனித்தேன் கண்ணில் பட்ட காலை .
ReplyDeleteஓட்டியவனின் மரக் கால் !!
...
மனம் மரத்துப்போன மனிதர்கள் !
வேதனைகள் நிறைய இருக்கின்றன.
ReplyDelete